உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

> மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த

கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் இருபாலினதவரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு, பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தம் கொள்கிறவர்களும், பய தாக்குதலில் அகப்படுபவர்களும், பதட்டத்திற்கு ஆட்படுகிறவர்களும் இந்த நோய்க்கு இரையாகின்றனர். இரத்த கொதிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், கவனம் மிகவும் அவசியம்.



ஹைபர் டென்ஷன் என்னும் இந்த நோய், பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. மாரடைப்பு, வாதம் போன்றவை வருவதற்கான அறிகுறியாக உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. ஆகவே இரத்த அழுத்தத்தை சரியான விகிததில் வைத்து கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடும், மருந்துகளும் முக்கியம்.
இன்றைய உணவுகளில் பல, இந்த நோயை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் , இரத்த கொதிப்பு உள்ளவர்கள் கட்டாயமாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றை பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

உப்பு:
இரத்த கொதிப்பு உள்ளவர்கள், உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது, உப்பில் உள்ள சோடியம் , உடலின், சிறுநீரகம், இதயம்., தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது.

இரத்த அழுத்தம் உயரும் போது, தமனிகளில் அழுத்தம் அதிகமாகி, அவற்றை குறுக்கி விடுகிறது அல்லது, வெடிக்க செய்கிறது.

சில நேரங்களில் அதிக அளவு சோடியம் உட்கொள்ளல் , இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள், அதிகமான சோடியம் உட்கொள்ளளால் பாதிப்படைகிறது. தொடக்கத்தில், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது.
ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரி 2.5மிகி அளவு உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பை மட்டும் தனியாக உட்கொள்ளுவது அல்லது உப்பு அதிகம் உள்ள உஅனவை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இரத்த அழுத்தத்தின் அளவை உயர்த்தும்.


கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்:

கேன் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் , சூப் , பீன்ஸ் ஆகியவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. இவை நீண்ட நாள் கெடாமல் இருக்க இத்தகைய அதிகளவு உப்பு தேவைப்படுகிறது . ஒரு வேளை , கேன் உணவுகளை உட்கொள்ள வேண்டி இருக்கும் போது, அந்த உணவை, கொத்துமல்லி கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து பின்பு எடுத்து உண்ணலாம். இதனால், அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவு குறையும். கேனில் பதபடுத்தபட்ட சாஸ், கெட்சப் போன்றவற்றிலும் அதிக உப்பு சேர்க்கபட்டுள்ளது.

நீண்ட நாட்கள் அவற்றை பாதுக்கக்க இத்தகைய நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. ஆகவே இவற்றை வாங்கி பயன்படுத்துவதை விட சாஸ் போன்றவற்றை வீட்டில் தயாரித்து உண்ணலாம்.

இதானல் நமக்கு தேவையான அல்லது சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ளலாம் . சூப், நூடுல்ஸ் போன்றவற்றிலும் உப்பு அதிகம் சேர்க்கபடுகிறது. வேக வைப்பதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க இந்த பொருட்களில் உப்பு அதிகம் பயன்படுத்தபடுகிறது.

ஆகவே, சூப், நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கும்போது, குறைந்த சோடியம் உள்ளவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றோடு, வீட்டில் இருக்கும் பச்சை காய்கறிகளை வேக வைத்து , சேர்த்து உண்ணலாம்.


பதப்படுத்தப்பட்ட உணவு:
குளிர்பதனம் செய்யப்பட்ட சிக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், இறால், சிக்கன் சாசேஜ் , நுக்கட், பிரெஞ்சு ப்ரை போன்றவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, சோடியம் அதிகமாக சேர்க்கபடுகிறது.

இதனால் இவற்றின் சுவை கூடுகிறது. தயாரிக்கும் நேரம் குறைகிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட , மற்றும் குளிரூட்டபட்ட ப்ரோசன் உணவுகள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

ஆகவே, தினசரி புதிய காய்கறிகள் மற்றும் பொருட்களை மார்க்கெட்டிற்கு சென்று வாங்கி பயன்படுத்துவது நல்லது.


இனிப்பு உணவுகள்:
இன்றைய சந்தைகளில், நிறைய இனிப்பு உணவுகள் கிடைக்கின்றன. அதில் சேர்க்கபட்டுள்ள இனிப்பு, இயற்கை இனிப்பாகவும் இருக்கலாம் அல்லது செயற்கை இனிப்பாகவும் இருக்கலாம்.

அதிக அளவு இனிப்பு உட்கொள்ளல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். மேலும், இவற்றில் கலோரி அளவும் அதிகம். நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் , இத்தகைய பழக்கம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கும், அதிக எடை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆகவே, நேரடியாக உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கலாம். அல்லது சாக்லேட் , பிரட், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, போன்றவற்றை உண்ணுவதை தவிர்க்கலாம் . சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும் உணவுகளை அறிந்து அவற்றை உட்கொள்ளலாம்.

ஆனால் எது எப்படி இருந்தாலும், இனிப்பு உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.


குளிர்பானங்கள் :
நம்மில் பலரும் குளிர்பானகளுக்கு அடிமையாகவே இருக்கிறோம். அதன் சுவை மற்றும் தாகத்தை தணிக்கும் தன்மை அவற்றிற்கான தேடலை அதிகரிக்கிறது. அசிடிட்டியை குறைக்க உதவும், இத்தகைய குளிர்பானங்களில் கார்போனேடட் சோடா என்ற ஒரு ரசாயனம் சேர்க்கபடுகிறது. மேலும் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

இவற்றில் இருக்கும் இனிப்புத்தன்மை, சாக்லெட்டில் இருப்பதை விட அதிகமானது. தொடர்ந்து குளிர்பானங்கள் பருகுவதால், எடை அதிகரிக்கிறது, மேலும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது.

ஆகவே, குளிர்பானங்களை குறைத்து புதிதாக பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.


மாவு பண்டங்கள் :
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எப்போதுமே கேக், குக்கி போன்ற மாவு பண்டங்களில் ஈடுபாடு அதிகம். இதன் நாவுறும் சுவைக்கு அனைவரும் அடிமையாவர் . என்ன தான் அதி அற்புத சுவை இருந்தாலும், இந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பல்வேறு கெடுதல்களை செய்கின்றன.

ஏனென்றால், இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது ஒரு முக்கிய காரணம். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் ஏற்படும்போது, உடலின் அழகு வடிவம் இழக்கப்படுவதுடன், உடல் சார்ந்த பல நோய்கள் உண்டாகிறது, இரத்த அழுத்த அளவும் அதிகரிக்கிறது. ஆகவே இத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.


மதுபானம்:
இன்றைய நாகரீக உலகில், பல இளைஞர்களும், பெரு நிறுவன ஊழியர்களும், மது அருந்துவதை ஒரு ஸ்டைல் என்ற நிலையில் பார்க்கின்றனர். மதுபானங்களில், சர்க்கரை அளவு அதிகமாக சேர்க்கப்படுகிறது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் உண்டாகிறது . மது அருந்துவதால் சிறுநீரக கோளாறு, இதய நோய், போன்றவை உண்டாகிறது, மேலும் உடல் பருமன் ஏற்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, இரத்த கொதிப்பிற்கு காரணமாகின்றன. இதனால் மொத்த உடலும் பாதிப்படைகிறது.


புகையிலை
புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.'இந்த வாசகத்தை அனைவரும் அறிவோம். புகைலை, என்பது, புற்றுநோய், நுரையீரல் கோளாறு, ஆரோக்கிய கெடுதல் ஆகியவற்றிகு முக்கிய காரணம்.

மேலும், புகையிலை மெல்லுதல் அல்லது புகை பிடித்தல், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகமான் புகையிலை உட்கொள்ளளால், தமணிகளின் சுவர்கள் குறுகலாகின்றன.

புகையிலையை நேரடியாக உட்கொள்வது அல்லது புகை பிடிப்பது , ஆகிய இரண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே இந்த பழக்கத்தை முற்றிலும் கை விடுவது நல்லது.


காபின் :
மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் , காலையில் எழுந்தவுடன் மிதமான சூட்டில் பருகும் காபி , காலை வேளை`யை சுறுசுறுப்பாக்கும் ஒரு மந்திர மொழி. ஆனால் , அதுவே காபி உட்கொள்ளல் அல்லது காபின் பொருட்களை அதிகம் உட்கொள்வது இரத்த கொதிப்பை அதிகப்படுத்தும். ஆகவே காபின் உணவுகளை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.


ஊறுகாய்:
ஊறுகாய் பிடிக்காதவர்கள் மிகவும் சிலரே. இந்தியாவில், ஊறுகாயை ஒரு வேளையாவது தங்கள் உணவில் இணைத்துக் கொள்வர். தென்னிந்தியர்கள், சாதத்துடனும், வட இந்தியர்கள், சப்பாத்தி அல்லது பராத்தாவுடன் ஊறுகாயை சேர்த்து சாப்பிடுவர்.

ஊறுகாய் சாப்பிடுவதற்கு சுவையானதாக இருந்தாலும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தும் சோடியம், இரத்த கொதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே, சோடியம் அல்லது இனிப்பு குறைவாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஊறுகாய்களை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அவற்றை தயாரிக்கலாம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் , அவர்கள் உண்ணும் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மேலும் பல உடல் உபாதைகளை உண்டாக்கும். ஆகவே மேலே குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமாக வாழலாம்.

– அனைவருக்கும் பகிருங்கள்

முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்...

எல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முகத்திற்கு ஒரு க்ரீம், கை தனி க்ரீம், கால்களுக்கு ஒரு க்ரீம் என்று உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு க்ரீம்மை வாங்கி பயன்படுத்துவோம்.



பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இப்படி கருப்பாக இருப்பதால், ஃபேஷனான பல உடைகளை உடுத்த முடியாமல் பல பெண்கள் வருத்தப்படுவார்கள்.

ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும். இக்கட்டுரையில் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

சர்க்கரையில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் நீர் பயன்படுத்திக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முழங்கையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமை அகலும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும்.

எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நீங்கா கருமையை அகற்றும்.

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்த்து பின் நீரில் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களைப் போக்கும் சில இயற்கை வழிகள்!

சிலருக்கு சருமத்தில் வெள்ளை நிறத்தில் திட்டுகளாக இருக்கும். இம்மாதிரியான திட்டுக்கள் முகம், கைகள், கால்கள் மற்றும் பாதம் போன்ற பகுதிகளில் அசிங்கமாக காணப்படும். சரி, இப்படி வெள்ளைத் திட்டுக்கள் எதனால் வருகிறது என்று தெரியுமா? நிறத்தை வழங்கும் மெலனினை உற்பத்தி செய்யும் சரும செல்கள் முறையாக செயல்படாமல் போகும் போது வருவது தான் வெள்ளைத் திட்டுக்கள்.


ஒருவரது உடலில் போதுமான அளவில் மெலனின் இல்லாத போது, ஆரோக்கியமான சரும செல்களானது இறந்து சருமத்தில் படிந்து, வெள்ளைத்திட்டுக்களாக படியும். சில நேரங்களில் இந்த வெள்ளைத் திட்டுக்கள் ஹைப்பர் தைராய்டு, உயர் இரத்த அழுத்தம், வைட்டமின் பி12 குறைபாடு, நீண்ட நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்குவது, குறிப்பிட்ட மரபியல் பண்புகள் போன்றவற்றாலும் வரும்.

இப்படிப்பட்ட வெள்ளைத்திட்டுக்களை குறிப்பிட்ட சில இயற்கை வழிகளின் உதவியுடன் போக்க முடியும் என்பது தெரியுமா? இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களை மறையச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* ஒரு பௌலில் சிறிது மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துளிகள் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது காலையிலும், மாலையிலும் தடவ வேண்டும்.

* இல்லாவிட்டால், சிறிது வேப்பிலையை அரைத்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

* தண்ணீர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை 2:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து, தினமும் பலமுறை வெள்ளைத்திட்டுக்களின் மீது தடவுங்கள்.

* இல்லாவிட்டால், தினமும் குளிக்கும் போது அந்நீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, அந்நீரில் வெள்ளைத்திட்டுக்கள் உள்ள இடத்தை 15 நிமிடம் ஊற வையுங்கள். இதனால் வெள்ளைத் திட்டுக்கள் மாயமாய் மறையும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் அரிசி பவுடர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் 2 முறை செய்தால், விரைவில் வெள்ளைத்திட்டுக்கள் மறையும்.

* இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வெள்ளைத் திட்டுக்களை விரைவில் மறையச் செய்யும். அதிலும் இஞ்சி சாற்றினை வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.

* இல்லாவிட்டால், சிறிது சிவப்பு களிமண்ணை இஞ்சி சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டு உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள்.

* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, இஞ்சி சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் நீர் சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும்.

* முட்டைக்கோஸ் ஜூஸை வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்ய வேண்டும்.

* நீரில் சிறிது முட்டைக்கோஸ் இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

வைட்டமின் ஈ எண்ணெயில் உள்ள சரும செல்களைப் புத்துணர்ச்சி செய்யும் பண்புகள், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கும். இத்தகைய வைட்டமின் ஈ எண்ணெயை தினமும் பலமுறை சருமத்தில் தடவ வெள்ளைத் திட்டுக்கள் சீக்கிரம் மறைந்துவிடும்.

காப்பர் பாத்திரத்தில் இரவில் படுக்கும் முன் நீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி செய்யும் போது, காப்பர் பாத்திரத்தில் உள்ள உட்பொருட்கள், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, வெள்ளைத் திட்டுக்களை மறையச் செய்யும்.

துளசி இலைகளை பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன், வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்கள் மறையும்.

* 1 கப் நீரில் சிறிது வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

* இல்லாவிட்டால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவுங்கள்.

– அனைவருக்கும் பகிருங்கள்

தும்மல், மூக்கு ஒழுகல் தொல்லை அதிகமா இருக்கா? அதை தடுக்க இதோ சில எளிய வழிகள்!

இன்று நிறைய பேருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. பனிக்காலம் வந்தாலே, சிலருக்கு கடுமையான தலைவலி மற்றும் தும்மல் வந்து பாடாய் படுத்திவிடும். அதோடு, ஜலதோஷம், மூக்கடைப்பு, இளைப்பு போன்ற பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படக்கூடும். இந்த சைனஸ் பிரச்சனையை சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறிய பைகளில் நீர் தேங்கி, மூளை வரை சென்று பின் மூளைக்காய்ச்சலை வரவழைத்துவிடும்.


ஆனால் இந்த சைனஸ் பிரச்சனைக்கு தற்போதைய நவீன மருத்துவத்தில் சிகிச்சைகள் இருப்பதால் அஞ்சத் தேவையில்லை. சைனஸ் பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஒருசில வீட்டு வைத்தியங்களின் மூலம் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

இக்கட்டுரையில் சைனஸ் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி சைனஸ் தீவிரமாவதைத் தடுத்திடுங்கள்.

சுவாச பிரச்சனையில் இருந்து விடுபட, ஒரு மெல்லிய துணியில் சிறிது கருஞ்சீரகத்தை எடுத்து இறுக்கமாக கட்டி சுவாசித்து வாருங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதோடு, சுடுநீரில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து, ஆவி பிடியுங்கள். இதனாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சைனஸால் மூக்கு ஒழுகல் அதிகமாக உள்ளதா? அப்படியானால் ஆலிவ் ஆயிலை மூக்கு மற்றும் கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் மூக்கு ஒழுகல் நிற்பதோடு, மூக்கடைப்பில் இருந்தும் விடுவிக்கும். இது மிகவும் எளிய வழி. தவறாமல் முயற்சி செய்யுங்கள்.

சைனஸ் இருப்பவர்கள், சுடுநீரில் நனைத்த துணியால் மூக்கைச் சுற்றி ஒத்தடம் கொடுப்பதன் மூலம், சைனஸில் இருந்து நிவாரணம் அளிக்கும். முக்கியமாக இச்செயலால் சளியால் மூக்கைச் சுற்றி ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு வெங்காயம் மற்றும் பூண்டை ஆரம்பத்தில் சிறிய அளவில் எடுக்க ஆரம்பித்து, பின் மெதுவாக அதிகரியுங்கள். வேண்டுமானால் இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்தும் கொள்ளலாம்.

கேரட் ஜூஸில் உள்ள மருத்துவ குணங்கள், சைனஸ் பிரச்சனைக்கு நல்ல சிகிச்சை வழங்கும். ஆகவே சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வருவது நல்லது. வேண்டுமானால், கேரட் ஜூஸ் உடன் பீட்ரூட், வெள்ளரிக்காய் அல்லது பசலைக்கீரை சாற்றினையும் கலந்து கொள்ளலாம்.

சைனஸ் பிரச்சனை சற்று அதிகமாக இருந்தால், தினமும் 4-5 முறை நல்ல சூடான நீரால் ஆவி பிடியுங்கள். இதனால் நாசி துவாரங்களில் உள்ள சளி இளகி வெளியேறி, சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

சைனஸ் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ, எபிதீலியம் படலத்தின் வலிமையை மேம்படுத்த உதவி, சைனஸ் தொற்றுகளைத் தடுக்கும். இது சைனஸ் பிரச்சனைக்கான மிகவும் பிரபலமான ஓர் இயற்கை வழி.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், பசலைக்கீரை போன்ற ஜூஸ்களை ஒன்றாக கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் 100 மிலி வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் 300 மிலி கேரட் ஜூஸ் கலந்து குடித்தால், சைனஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வா? அதற்கு இது தான் காரணம்!

உணவு என்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய தேவையாக உள்ளது. உணவு என்பது வாழ்க்கைக்கான ஒரு ஆதாரமாக மட்டுமில்லாமல் நீங்கள் உங்களது வாழ்க்கையை நோய் இல்லாமல் வாழ தேவைப்படும் ஒரு முக்கிய தேவையாகவும் உள்ளது. நமது உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி வெளியில் தெரியும். அது என்ன என்று ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொண்டால் நீங்கள் ஆரோக்கியமான நலமான வாழ்க்கையை வாழலாம்.



சிலருக்கு சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தெரியாமல் இருப்பார்கள், இந்த வாந்தியானது காலை காய்ச்சல் போன்றவற்றை தோற்றுவிக்கலாம். இந்த பகுதியில் காலை காய்ச்சலுக்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி காணலாம்.

உணவு ஏதாவது உங்களது உடலுக்கு சேராமல் புட் பாய்சன் ஆகிவிட்டால் உங்களுக்கு வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு, வயிற்று பொறுமல், தசைகளில் வலி போன்றவை உண்டாகலாம். இது உடலுக்கு சேராத உணவை சாப்பிட்ட சில மணி நேரங்களிலோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ உண்டாகலாம்.

வயிற்றில் உண்டாகும் அல்சரின் காரணமாகவும் உங்களுக்கு சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகலாம். இது முதலில் காரணமே தெரியாத ஒரு வலியாக தெரியும். அதன் பின்னர் வயிற்றில் எரிச்சல் போன்றவை உண்டாகும். இதனால் உடல் எடை குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும்.

இரைப்பை அலர்ஜி என்பது குடலில் உள்ள தோலில் ஏதேனும் அரிப்பு உண்டாகியிருப்பதால் பிரச்சனைகள் உண்டாகும். இதனால் உணவு செரிமானமாவதில் கோளாறு, வயிறு எப்போதும் நிறைந்து இருப்பது போன்ற உணர்வுகள் போன்றவை உண்டாகலாம்.

செரிமானமின்மையானது ஏதேனும் சில காரணங்களால் உண்டாகலாம். இந்த செரிமானமின்மைக்கு வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு சரியில்லாதது போன்ற உணர்வுகள், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் இந்த செரிமானமின்மையின் போது உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை பிரித்து சாப்பிடலாம்.

உங்களது வயிற்றில் சுரக்கும் ஆசிட் ஆனது உணவுக் குடலை தாண்டி வரும் போது இந்த பிரச்சனை உண்டாகிறது. இது நீங்கள் சாப்பிடாமல் இருக்கும் போது உங்களது உணவுக் குழாயை மூடுகிறது.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக மது அருந்துதல் கூடாது. மது அருந்தினால் நீங்கள் என்ன தான் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும் கூட, இந்த பிரச்சனை சீக்கிரமாக அதிகரிக்கும். இந்த குடிப்பழக்கம் இருந்தால், உங்களது வயிற்றில் இருக்கும் அமில தன்மை அதிகரிக்கும்.

உங்களுக்கு இது போன்ற ஒரு நிலை இருந்தால் காரமான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கார உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் சேதமாகும். மசாலா பொருட்கள், மிளகாய், மிளகாய்தூள் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

காபி அதிகமாக பருகுபவரா நீங்கள்? காபி அதிகமாக பருகுவதாலும் பெப்டிக் அல்சர் வருகிறது. எனவே நீங்கள் ஜூஸ் வகைகளை குடிப்பது நல்லது. இதனால் வயிற்றில் இருக்கும் புண்கள் ஆறவும் வாய்ப்புகள் உள்ளது.

காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை...!

கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.



மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

கண், முகம், வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும். இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெளியேறிவிடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

ஸ்பைருலினாவை யாரெல்லாம், எப்போது சாப்பிட வேண்டும்!! அவசியமான தகவல்கள்!!

ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பாத்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.



அப்படியென்ன அந்த ஸ்பபைருலினாவில் இருக்கிறது. அது எதனால் ஆனது என சந்தேகங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா? அதனை யாரும் சாப்பிடலாமா? எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாமா என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?

இப்படி பல விஷயங்கள் உங்களுக்கு அதனைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு மட்டுமல்ல,. அதனைப் பற்றி நீங்கள் தெரிந்திராத தகவல்களுடன் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்பைருலினா ஒரு பாசி வகை சேர்ந்தது. ஈரப்பதத்தில் வளரக் கூடியது. இது மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி கடற்பாசி வகையை சேர்ந்தது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொண்டது.

அதில் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதில் முக்கியமக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அதிக புரதமும் இருக்கின்றது. இது பல்வேறு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அளவிற்கு பெரும் ஆற்றல் கொண்டது.

ஜீரண சக்திக்கு :

இது ஜீரண என்சைம்களை கொண்டுள்ளது. ஆகவே அஜீரணப் பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் கொழுப்பு இல்லாததால் எளிதில் செரிக்கபப்டுகிறது.

என்றும் இளமையாக இருக்க ஸ்பைர்லினாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது முதுமையை தள்ளிப் போடுகிறது. இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் குளோரோஃபில் இளமையான செல்களை தக்க வைக்க அவசியமாகும்.

உடல் எடை கூடிக் கொண்டே போகிறவர்களுக்கு சிறந்த டயட்டாக ஸ்பிருலினாவை சொல்லலாம். இது உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.

ரத்த சோகையால பாதிக்கப்பட்டவர்கள் ஸ்பைருலினாவை சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. ரத்தம் மற்றும் இதர உடல் உறுப்புகளை சுத்தகரிக்க தூண்டுகிறது.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி போன்றவை வராமல் காக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் ஸ்பைருலினா மருந்தாக பயன்படுகிறது. மூட்டு வீக்கங்களை சரிப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நல்ல நினைவுத் திறனையும் பெற உதவுகிறது.

உடல் எடை குறைக்கனுமா?

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவுக்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்பைருலினாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

> மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்ல...

Kategori

Kategori